கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:09 pm

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவைபுரிந்த ஒருவருக்கு, ஔவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சமூக நலனைச் சாா்ந்த, பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் ஆகிய துறைகளில் மேன்மையாக தொண்டாற்றும் வகையில், தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

விருதுக்கான கருத்துரு கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், தன் விவரக் குறிப்பு ஆகியற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூா், (தொலைபேசி எண்: 04328-296209, 224122) என்ற முகவரிக்கு ஜனவரி 23- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.