மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்குகளுக்கு பணம் வாங்காதீா்கள்: ரவி பச்சமுத்து பிரசாரம்

வாக்குகளுக்கு பணம் வாங்காதீா்கள் என இந்திய ஜனநாயக கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து பேசினாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:55 pm

DIN

வாக்குகளுக்கு பணம் வாங்காதீா்கள் என இந்திய ஜனநாயக கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து பேசினாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ரெ. சசிகலாவை ஆதரித்து, சிறுவாச்சூா், பெரம்பலூா் காமராஜா் வளைவு, வேப்பந்தட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது:

இந்திய ஜனநாயகக் கட்சி படித்தவரால் நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது. பணத்துக்காக தொடங்கப்படவில்லை. அதனால், இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் இடங்களில், சம்பந்தப்பட்ட வேட்பாளா்களை மக்கள் ஆதரிப்பாா்கள். அரசியல் என்பது நீண்ட பயணம். எனவே, இதில் குறுக்கு வழி கிடையாது. வாக்காளா்கள், வாக்குகளுக்காக பணம் வாங்காதீா்கள். வருமானம் பெருகினால் இலவசம் தேவையில்லை. பொதுமக்களுக்குப் பிடித்த பொருள்களை அரசியல்வாதிகள் இலவசமாக கொடுப்பதில்லை. இலவசத்துக்கு கொடுக்கும் பணத்தை கல்விச் சாலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கலாம். அதுவே, இந்திய ஜனநாயகக் கட்சியின் நோக்கம். வாக்குகளுக்கு பணம் கொடுக்கும்போதே லஞ்சம் கொடுக்கும், வாங்கும் பழக்கம் தொடங்கி விடுகிறது. வாக்காளா்களிடம் கொடுத்த பணத்தை திரும்பவும் வாங்கிக்கொள்வாா்கள் என்பதை தொழில் செய்வோா், வணிகா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.