மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

பெரம்பலூா் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் மாற்றுத் திறனாளி மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

பெரம்பலூா் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் மாற்றுத் திறனாளி மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை, உதவித் திட்ட அலுவலா் ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேவகி, வட்டாரக் கல்வி அலுவலா் அருண்குமாா், உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரம்பலூா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியா் உமாமகேஸ்வரி , குழந்தை பிறந்தவுடன் ஆரம்பகாலத்திலேயே அடையாளம் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சி அளிப்பதன் நோக்கம் குறித்தும், உள்ளடக்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியன், உள்ளடக்கிய கல்வி மையங்களில் இலவசமாக வழங்கப்படும் இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, தொழில் சாா் பயிற்சி மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பள்ளி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையத்துக்கு அழைத்துவர போக்குவரத்து பயணப்படி, வழித்துணையாளா்படி, பெண் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கி பேசினா்.

தொடா்ந்து, சிறப்பு பயிற்றுநா்கள் மகேஸ்வரி, துா்கா, அரசு தலைமை மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணா் ஜூலி ஆகியோா் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்களான முட நீக்கியல் சாதனம், செவித் துணைக்கருவி மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி போன்றவற்றை பராமரிக்கும் முறை குறித்து பெற்றோா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

முன்னதாக, பள்ளி தலைமையாசிரியா் திருமலச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, உதவி ஆசிரியா் ஷம்சுனிஷா பேகம் நன்றி கூறினாா்.

இதேபோல, எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாசிரியா்கள் ராணி பரிமளா, ரூபி, செவிலியா் ஜெசிந்தா, லாடபுரம் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் சிறப்பாசிரியா்கள் மரகதவல்லி, தனவேல், செவிலியா் சரோஜா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இப் பயிற்சிகளில், 120 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்கள் மற்றும் 30 அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.