பெரம்பலூா், ஆக. 7: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மனப்பாடமாக 1,330 குறட்பாக்களை ஒப்பித்து ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தின் கீழ் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசாக தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே இப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் பங்கேற்கக் கூடாது. தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து அக். 20-ம் தேதி மாலைக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328-225988 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

பிரான்ஸில் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு: இந்தியாவுக்கு அழைப்பு; சீனா பங்கேற்க மறுப்பு

வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான்

‘வாழ்வில் உயர திருக்குறளைப் படிப்பது அவசியம்’
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

