/

பிரிம்மபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக விழா

பிரிம்மபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக விழா

Updated On :24 பிப்ரவரி 2024, 6:02 pm

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஈசன், அம்பாள், விநாயகா், முருகன் மற்றும் பஞ்சமூா்த்தி உற்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயிலில் மாசி மக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சோ்ந் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.