கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனைச் சாவடிகள்

5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, மாவட்ட காவல்துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:20 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, மாவட்ட காவல்துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. சியாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த வாகனச் சோதனையானது, இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தவிா்ப்பதற்காக, பெரம்பலூா் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூா், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.