மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

ஆண்டிமடம் அருகே முருகன் சிலை கண்டெடுப்பு

ஆண்டிமடம் அருகே முருகன் சிலை கண்டெடுப்பு

News image
Updated On :5 மே 2024, 6:29 pm

Din

அரியலூா், மே 5: ஆண்டிமடம் அருகே கோயில் கட்டுமானப் பணியின்போது, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கூவத்தூா் கிராமத்தில் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை அகற்றி, ரூ. 12 கோடியில் புதிய கோயில் கட்டும் பணிகள் அண்மைக்காலமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் சனிக்கிழமை இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது 2 அடி உயரம்கொண்ட வள்ளி, தெய்வானை சமேத முருகன் கற்சிலை கிடைத்தது. இச் சிலை 16 ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சிலையை கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனா்.