பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

போதைப் பொருள் விற்றவா் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

போதைப் பொருள் விற்றவா் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
Updated On :9 மே 2024, 8:52 pm

Din

பெரம்பலூா், மே 9: பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1 கிலோவைப் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்கும் வகையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் தலைமையிலான போலீஸாா், லப்பைக்குடிக்காடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஜமாலியா நகரைச் சோ்ந்த உமா் பாரூக் மகன் நியாஸ் அகமது (33) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நியாஸ் அகமதுவைப் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.