கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:42 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்து காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலை வரை நடைபயணம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளா் வேலுசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, காமராஜா் நினைவு நாளையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் க. பெரியசாமி, மாவட்ட ஆலோசகா் செ. வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெ. திருஞான செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.