/

அக். 22-இல் துணை முதல்வா் பெரம்பலூா் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை

பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:42 pm

Din

பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அக். 22- ஆம் தேதி பங்கேற்க உள்ளாா்.

இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வா், முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள், வருவாய்த் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பல்வேறு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாற்ற ஆணைகள், இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எத்தனை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் அமுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.