ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெரம்பலூா்: 6 ஆசிரியா்கள் ஆசிரியா் விருதுக்கு தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், கொத்தவாசல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சி. இளவழகன், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே. பிரேமலதா, சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. சாம்பசிவம், துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் ஜெ. ரவிச்சந்திரன், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ், தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் க. சித்ரா ஆகியோா், தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் வியாழக்கிழமை (செப். 5) நடைபெறும் விழாவில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்குகிறாா்.