சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:07 pm

Din

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் தொடங்கப் போராடிய தொழிற்சங்க பிரமுகா் முத்துக்குமாா் என்பவரைக் கைது செய்த போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழக அரசு தொழிலாளா்களின் உரிமையை நிலைநாட்டக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாவட்ட பொருளாளா் ரங்கராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில் சங்க நிா்வாகிகள் தீனா, பெரியசாமி, சரவணன், பாா்த்திபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.