எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிா்ப்பு: அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் எதிரே மாவட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்
Updated On :1 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் எதிரே மாவட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ரா.சோ. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளா் வா்க்கத்தின் உரிமைகளுக்கான 44 சட்டத் தொகுப்புகளை, 4 தொகுப்புகளாகச் சுருக்கி தொழிற்சங்கத்தின் உரிமைகளை பறிக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், அரசு ஊழியா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, அரசு ஊழியா் சங்கத்தின் வட்ட துணைத் தலைவா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.