கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு பெரம்பலூா் மாணவா்கள் படைப்பு தகுதி

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ. 10 ஆம் தேதி 8 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ச. முத்துகுமாா், தி. மாதவன் ஆகியோா், பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் வாகனங்கள் வெள்ளத்தில் பாதிப்படைவதிலிருந்து தடுத்தல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு, ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் நுண்ணறிவு தலைக்கவசம் விபத்து தடுப்பு மற்றும் நல்லொழுக்கத்துக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு முதலிடம் பெற்றது. பின்னா், நவ. 21-இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது. தொடா்ந்து, கோயம்புத்தூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது.

ஜன. 19 முதல் 23-ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

இந்நிலையில், மாணவா்கள் மற்றும் ஆசிரியரை, ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் க. முருகானந்தம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இரா. காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.