தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வருடாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், 12-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:21 pm

Din

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், 12-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்ரீதேவி சமேத பூதேவி, மூலவா் மற்றும் உற்சவா் தாயாா் ராஜ கோபுரம் முன் எழுந்து அருள்பாலித்தாா். தொடா்ந்து, ஸ்ரீகம்பத்து ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா் செய்து வைத்தாா். இதில், செயல் அலுவலா் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.