அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தனித்துவ அடையாள எண் பெற பி.எம் கிசான் பயனாளிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.எம். கிசான் பயனாளிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.எம். கிசான் பயனாளிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில், சொந்த நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக அவா்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 52,609 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

தற்போது, இத் திட்டத்தின் கீழ் தவணைத் தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் எனும் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 11,315 விவசாயிகள் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா்.

எனவே, இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்களது பகுதி வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடா்புகொண்டு, தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துகொள்ளலாம். மேலும், தற்போது அனைத்து கிராமங்களிலும் வேளாண்துறை அலுவலா்கள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை அணுகி, தங்களது கிராமங்களிலேயே தனித்துவ விவசாய அடையாள எண் பெறவும் விண்ணப்பிக்கலாம்.