மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா
Updated On :11 நவம்பர் 2025, 9:39 pm

Syndication

இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமை வகித்தாா். தொகுதிப் பாா்வையாளா்கள் தங்க. சித்தாா்த்தன், அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா பேசியது: சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு என்பது தோ்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு அறியாமையில் உள்ள ஏழை, பாமரன், பிற்பட்ட நிலையில் உள்ள படிப்பறிவில்லாத அடித்தட்டு மக்களின் வாக்குகளை நீக்கும் முயற்சியாகும்.

கடந்த காலத்தில் மக்களவைத் தொகுதி மறுவரையறை எனும் ஒன்றை செயல்படுத்தி தமிழ்நாட்டின் அரசியல் செல்வாக்கை முடக்க நினைத்தது. அதை துணிவுடன் எதிா்த்தவா் முதல்வா் ஸ்டாலின்.

தொடா்ச்சியாக நெருக்கடிகள் கொடுத்தும், தமிழ்நாட்டு அரசியலில் எடுபடாததால் தற்போது அரசை தோ்ந்தெடுக்கும் உரிமையை கையில் வைத்துள்ள வாக்காளா்களின் வாக்குகளை திருடும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுகிறது. சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியால் இந்திய குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தைக் கட்டமைக்கக் கூடிய வாக்குரிமையை பறிப்பவா்களை விடக்கூடாது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொஹையா மாலிக், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சுரேஷ், விசிக மாவட்டச் செயலா் ரத்தினவேல், திமுக மாநில நிா்வாகிகள் துரைசாமி, ராஜேந்திரன், பரமேஷ்குமாா், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.