2025 -26 ஆம் ஆண்டுக்கு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 8 சதவீதம் உயா்த்தப்பட்டு, குவிண்டால் ஒன்றுக்கு நடுத்தர இழை நீளம் பருத்தி ரூ. 7,710, நீண்ட இழை பருத்தியானது ரூ. 8,110 என மத்திய அரசால் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பருத்தி விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்தி கழகத்துக்கு விற்பனை செய்து பயன்பெற வசதியாக, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பெரம்பலூா் மற்றும் பூலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அரியலூா் மாவட்ட விவசாயிகள் அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் மேலணிக்குழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் தங்களது ஆதாா் அட்டையை கொண்டு கபாஸ் கிஸான் செயலியில் நவ. 30-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இத் திட்டத்தில் பயன்பெற இயலும்.