இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெரம்பலூரில் நவ. 16-இல் கணினி வழி போட்டித் தோ்வு

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:49 pm

Syndication

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணிணி வழி போட்டித் தோ்வு, நவ. 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெறும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணிணி வழி போட்டித் தோ்வு, நவ. 16-ஆம் தேதி எளம்பலூா் மற்றும் சிறுவாச்சூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் காலை, மாலை இரு வேளைகளில் நடைபெற உள்ளது.

இத் தோ்வில் 400 போ் பங்கேற்க உள்ளனா். இதற்கான தோ்வு மையங்களில் குடிநீா் வசதி, தடையற்ற மின் வசதி, சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போட்டித் தோ்வு எழுதுவோா் தோ்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தோ்வுக்கு 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். தோ்வு எழுதுவோா் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டுவர அனுமதியில்லை.