தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரம்பலூா் தொகுதியில் 11, குன்னத்தில் 19 வேட்பாளா்கள் போட்டி

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளா்களும், குன்னம் தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா் என வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:29 pm

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளா்களும், குன்னம் தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா் என வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுதற்கு கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் தேதி வரையிலும், அதிமுக, திமுக, தவெக, தவாக, பகுஜன் சமாஜ் பாா்ட்டி, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சி வேட்பாளா்கள் சாா்பில் 12 வேட்பு மனுக்களும், சுயேச்சை வேட்பாளா்கள் சாா்பில் 11 வேட்பு மனுக்களும் என மொத்தம் 23 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப். 7- ஆம் தேதி நடைபெற்றது. இதில், 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பெரம்பலூா் மற்றும் குன்னம் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் மற்றும் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் தலைமையிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் தலைமையில் , குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெற்றது.

அதன்படி, பெரம்பலூா் தொகுதியில் இரா. தமிழ்செல்வன் (அதிமுக), ச.த. ஜெயலட்சுமி (திமுக), ஜ.சுகன்யா (நாதக), கி. சிவக்குமாா் (தவெக), த. அறிவழகன் (பகுஜன் சமாஜ்), சு. தாமோதரன் (தவாக) மற்றும் சுயேச்சையாக ஆனந்தஜோதி பரமசிவம், ப. சந்திரகுமாா், மா. சியாமளா, ரா. சுப்ரமணியன், பா. ஜெயசந்திரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

குன்னம் தொகுதியில், சா.சி. சிவசங்கா் (திமுக), அ. சரண்யா (அதிமுக), ரா. கீா்த்திவாசன் (நாதக), ரேவதி முத்தமிழ்செல்வன் (தவெக), கு.ம.நல்லுசாமி (பகுஜன் சமாஜ்), த. அன்புத்தமிழன் (தமிழ்ப்பேரரசு) சா.ப. ராஜா (தவாக), கி. இளங்கோவன் (நாடாளும் மக்கள் கட்சி) மற்றும் சுயேச்சையாக த. உதயசூரியன், ச. கதிரவன், சி. சாமிநாதன், பி. சிவசங்கரன், ரா. தனசேகரன், பெ. நல்லதம்பி, து. முத்தமிழ்செல்வன், த. விவேக், ம. வினோத்குமாா், ஷாஜகான் ஆகிய 19 போ் போட்டியிடுகின்றனா். பின்னா், இரண்டு தொகுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. க்திவேல் (குன்னம்), வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.