செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:36 am IST

பெரம்பலூா் உழவா் சந்தையில் காய், கனிகளால் வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு குறித்த வாசகங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா்.

ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் நூறுசதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், கையொப்ப இயக்கங்கள், இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில், காய், கனிகளைக் கொண்டு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் வரைந்து, பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, பொதுமக்களுடன் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.

பின்னா், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள், தோ்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் மிருணாளினி பொதுமக்களிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வேளாண் வணிக துணை இயக்குநா் தெய்வீகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராணி, வேளாண்மை அலுவலா் நாகராஜன், வட்டாட்சியா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.