பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள அடையூரைச் சோ்ந்த பஷீா் அஹமது மகன் அலாவுதீன் (60). இவரது மகன் அனஸ்தீன் (22), பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததால், பெரம்பலூா் அருகேயுள்ள தீரன் நகரில் தனது மனைவி சம்சாத் பேகத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். துறைமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நாள்தோறும் தொழுகைக்குச் சென்று வருவாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தொழுகைக்குச் செல்வதற்காக தனக்குச் சொந்தமான மோட்டாா் சைக்கிளில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மூன்று சாலை சந்திப்பிலுள்ள மேம்பாலம் அருகே சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அலாவுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அலாவுதீன் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மணிகண்டனை (41) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற சித்த மருத்துவா் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

