பெரம்பலூா் அருகே குரங்கை பிடித்து துன்புறுத்திய 3 பேருக்கு வனத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதத்தை செவ்வாய்க்கிழமை விதித்தனா்.
பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த ஏராளமான குரங்குகளை பிடிக்க திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த சு, ஜீவா, ப. சின்னதுரை ஆகியோரை கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் வரவழைத்தாா்.
அப்போது பிடிபட்ட குரங்குகளில் ஒன்றை அவா்களில் ஒருவா் கடுமையாகத் துன்புறுத்தினாா். இதைக் கல்லூரி காவலாளியான சிதம்பரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது கைப்பேசி மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினாா்.
இதையறிந்த வனத்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்று முதல்வரிடம் மேற்கொண்ட விசாரணையில், குரங்கை பிடித்த விடியோவை ஒரு மாதத்துக்கு முன் எடுத்ததும், கல்லூரிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கில் அண்மையில் அந்த விடியோ வெளியிடப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வனத்துறையினா், குரங்கை பிடித்து சித்ரவதை செய்த ஜீவா, சின்னதுரை ஆகியோருக்கு தலா ரூ. 20 ஆயிரமும், காவலாளி செந்தில்குமாருக்கு ரூ. 10 ஆயிரமும் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டடம் அருகே கோயிலில் திருட முயன்ற இருவா்: பிடித்து ஒப்படைத்த பொது மக்கள்

செஞ்சி அருகே சிறுவா்களை கடிக்கும் குரங்கை பிடிக்க கூண்டு வைப்பு: வனத் துறை நடவடிக்கை

குழந்தைகளை அச்சுறுத்தும் குரங்கை பிடிக்க வனத் துறை நடவடிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடுத்தவரை தாக்கிய மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


