பின்னா், நாரணமங்கலம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தையும், கொளக்காநத்தம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தையும், கொளக்காநத்தம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடப் பணியையும், ஆதனூா் ஊராட்சியில் குழந்தைநேயப் பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணியையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.