தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கறிக்கோறி வளா்ப்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் கறிக் கோழி வளா்ப்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கிலோவுக்கு ரூ. 20 உயா்வு கோரி 13-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி தலைமையில், திருப்பூா் மாவட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி உள்பட 11 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், அவா்களை விடுவிக்க கோரியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலா் சின்னதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கலந்துகொண்டனா்.