அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பெரம்பலூா் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில், மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

பெரம்பலூா் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில், மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ் விழாவுக்கு, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி காவலா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், கபடி போட்டிகளும், குழந்தைகளுக்கு நீா் நிரப்புதல், சாக்கு பை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு காவல்துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

இவ் விழாவில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கியராஜ் (பெரம்பலூா் உட்கோட்டம்), ஆனந்தி (மங்களமேடு உட்கோட்டம்), ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சுப்பையன், காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... பெரம்பலூா் அருகேயுள்ள சோமண்டபுதூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் அ. கல்யாணி தலைமை வகித்தாா். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், கட்சியின் மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, கட்டடத் தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவா் செல்வம், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலா் சரவணன், கிளைச் செயலா் வள்ளியம்மை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.