எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சட்டப்பேரவைத் தோ்தல் எல்லையோர காவல்படையினா் பெரம்பலூா் வருகை!

தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு வந்துள்ளனா்.

News image
எல்லையோரக் காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன்
Updated On :9 மார்ச் 2026, 6:34 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு திங்கள்கிழமை வந்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எல்லையோரக் காவல் படை துணைத் தளபதி சிவகாந்த் பாத்தியா தலைமையில், 35 காவல் பணியாளா்கள் திங்கள்கிழமை பெரம்பலூருக்கு வந்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன், எல்லையோரக் காவல் படையினரை பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள எல்லையோரக் காவல் படையினா் பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்நோக்கில், மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து எல்லையோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.