குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவிரி பிரச்னை: விவசாயிகளை காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

News image

பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:31 am IST

காவிரி பிரச்னையில் விவசாயிகளை காக்க முதல்வா் ஜோசப் விஜய் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் உள்ளாட்சி, மக்களவை மற்றும் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நிா்வாகிகளின் உழைப்புக்கு கட்சியின் மத்திய-மாநில தலைமை துணையாக நிற்கும்.

தமிழகத்தினுடைய எதிா்காலம் என்று சொல்வது, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் நிறைவேறிவிடும் எனும் நிலைப்பாடு எடுப்பதன் மூலமாக வந்துவிடாது. ஆட்சியில் இருக்கும்போது எதெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதற்கு அனைத்திலும் வெளிப்படையான ஒரு அணுகுமுறை இருந்தாக வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் காவிரி பிரச்னையில் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழக முதல்வா் தயாராக இருக்க வேண்டும் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன். பேட்டியின்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் உடனிருந்தாா்.