வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சொத்துத் தகராறில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்

சொத்துத் தகராறில் புதுக்கோட்டை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் குடும்பத்தினரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:54 am IST

சொத்துத் தகராறில் புதுக்கோட்டை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் குடும்பத்தினரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தம்பட்டி அருகே கலைக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்கள் போஸ் (50), ரவி(45). 
இவர்களுக்கு இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் போஸ் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். 
மேலும், காயம் அடைந்த ரவியின் மனைவி மகேஸ்வரி(38), மகன் அஜீத்(18) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போஸ் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது உடையாளிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.