சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

தூத்தூரில் அகற்றப்பட்ட பட்டுப்போன மரம்: தினமணி செய்தி எதிரொலி

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட

Updated On :25 டிசம்பர் 2018, 9:39 am IST

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட பழமையான மரம் தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே சுமார் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் இருந்தது. முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட இம்மரத்தின் பட்டுப்போன கிளைகள் பள்ளிக் கட்டடத்தின் மேல் படர்ந்திருந்ததால், இப்பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வந்தனர். எனவே, பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரத்தினை அகற்றக்கோரி ஊர் பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி தினமணி நாளிதழ் இதுகுறித்து செய்தி வெளியிட்டது. இதையடுத்து இம்மரம் அண்மையில் அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.