வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ. 6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய உளவு பிரிவினருக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அப்பகுதியில்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 5:00 am

DIN

புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய உளவு பிரிவினருக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அப்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் சென்ற மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து ஆய்வு செய்தபோது அதில் 19.5 கிலோ தங்கத்தை இருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு 6 கோடியாம். விசாரணையில் அவர்கள்  பொன்பேத்தியைச் சேர்ந்த பி. மருதுபாண்டி(45) மீமிசலைச் சேர்ந்த பெரியமருது மகன்  செல்வக்குமார் (36) எனத் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், அப்பகுதி போலீஸார் உதவியுடன் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.