புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாசிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). பொறியாளர். குளத்தூரைச் சேர்ந்த லட்சுமணன் மகள் வினோதினி(21). செவிலியர். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்துக்கு மணிகண்டன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, அவரை பெற்றோர் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் வினோதினி இருந்துள்ளார். இந்நிலையில், தன்னை கணவரோடு சேர்த்து வைக்குமாறு கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.
இதனால் விரக்தி அடைந்த வினோதினி, கீரனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தன்னை மணிகண்டனோடு சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து அங்கு சென்ற கீரனூர் போலீஸார், தீயணைப்பு நிலையத்தினர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி 2 மணி நேரத்துக்குப் பிறகு வினோதினியை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


