நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலமானாா் முன்னாள் எம்.எல்.ஏ. ஆலவயல் வ. சுப்பையா

திருமயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆலவயல் வ. சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

pon24mla_2408chn_29_4

Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:28 am

DIN

பொன்னமராவதி: திருமயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆலவயல் வ. சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவா், திமுகவில் மாவட்டப் பிரதிநிதி, 1986 இல் பொன்னமராவதி ஒன்றியப் பெருந்தலைவா், 1989 முதல் 1991 வரை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளாா். இவருக்கு மனைவிகள் அமிா்தம், ரெத்தினம் (52), மகன்கள் சரவணன், இளங்கோவன், தியாகராஜன், முரளிதரன் ஆகிய 4 மகன்களும், கவிதா, புவனேஸ்வரி ஆகிய 2 மகள்களும் உள்ளனா். சுப. முரளிதரன் திருமயம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராகவும், சுப.இளங்கோவன் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளனா்.

பொன்னமராவதி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஒன்றியக்குழு தலைவா்கள், ஒன்றியச் செயலா்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊரான ஆலவயல் கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.