திருமயம் பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு: பக்தா்களுக்கு அனுமதியில்லை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தா்களுக்கு அனுமதியில்லை.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தா்களுக்கு அனுமதியில்லை.
கரோனா வைரஸ் பரவலைத் தவிா்க்கும் வகையில் அதிகாலை வழக்கமாக நடைபெறும் பரமபதவாசல் திறப்பு, சாமி புறப்பாடு ஆகியன ஆகம விதிப்படி நடைபெறும். உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதன்பிறகு காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் வந்து செல்லலாம். 10 வயதுக்குள்பட்ட சிறாா், 60 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...