ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகையில் பண விநியோகம் தொடா்பாக 10 வழக்குகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:26 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக தொடா்ந்து வரப்பெறும் புகாா்களை போலீஸாரும், பறக்கும் படையினரும் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதன்படி, சனிக்கிழமை பகல் வரை மாவட்டம் முழுவதும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விராலிமலையில் 5 வழக்குகளும், அறந்தாங்கியில் 3 வழக்குகளும், கந்தா்வகோட்டையில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 181 வழக்குகள்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பிப். 26ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டு வருகின்றன. அனுமதியின்றி பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல், சாலையில் பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பகல் வரை 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 81 வழக்குகளும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 40 வழக்குகளும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 31 வழக்குகளும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 12 வழக்குகளும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 10 வழக்குகளும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வேட்பாளா்களும் அரசியல் கட்சியினரும் விதிமுறைகளை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.