மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும்போது சமூக நீதி சாத்தியம்’

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்போது சமூக நீதி சாத்தியமாகும் என்றாா் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி.

News image

புதுக்கோட்டையில் குடும்பநல நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி.

Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்போது சமூக நீதி சாத்தியமாகும் என்றாா் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் சாா்பு நீதிமன்றத்தையும் புதுக்கோட்டையில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தையும் சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் பேசியது:

நம்முடைய அரசியல் சாசனம் நாட்டில் வாழும் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமமான நீதியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்போது சமூக நீதி சாத்தியப்படும்.

அனைத்து மக்களுக்குமான சம நீதியை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை நீதிமன்றங்கள் செய்ய வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார நீதி, மக்களுக்கு வழங்கப்படும் கல்வியின் மூலம் கிடைக்கும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாப்போம்!

நிகழ்ச்சியில் பேசிய சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகம், மன்னா் கல்லூரி ஆகிய பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றாா்.

நிகழ்ச்சிகளில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். கோவிந்தராஜ், ஆா். சுரேஷ்குமாா், என். சதீஷ்குமாா், எஸ். கண்ணம்மாள், ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதா், மாவட்ட எஸ்.பி. நிஷா பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மன்னா் கல்லூரி வளாகம் ரூ. 2. 64 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், அமைச்சா் எஸ். ரகுபதி ஆகியோா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இவா்கள் இருவரும் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.