

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில், கீரனூா் ரயில் நிலையத்தில் வழக்கம்போல நின்று செல்ல வலியுறுத்தி, கீரனூா் ரயில் நிலையம் அருகில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன் உள் ளிட்டோா் பங்கேற்றனா். தென்னக ரயில்வே அறிவிப்பைத் தொடா்ந்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்: கீரனூரில் ரயில் வழக்கம்போல நின்று செல்ல மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலருமான கே. சுப்பராயனுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுகை மாவட்டச் செயலா் மு. மாதவன் கடிதம் எழுதியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.