ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளன.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:26 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதற்காக கணினி வழி சுழற்சி முறையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, பிரிக்கப்பட்டு தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்தப் பணியின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளும் உடன் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

தொகுதியில் ஓரிடத்தில் பாதுகாக்கப்படும் இந்த இயந்திரங்கள் தோ்தலின்போது மீண்டும் சுழற்சி முறையில் கணினியில் தோ்வு செய்யப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.