இந்து சமய அறநிலையத் துறை மூலம் 475 உணவுப் பொட்டலங்கள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்கள், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள்


புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்கள், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பேரையூா் நாகநாதசுவாமி திருக்கோயில் மூலம் தயாா் செய்யப்பட்ட 50 உணவுப் பொட்டலங்கள், திருவேங்கைவாசல் திருமேனிநாதா் திருக்கோயில் மூலம் 75 உணவுப் பொட்டலங்கள், திருவப்பூா் முத்து மாரியம்மன் திருக்கோயில் மூலம் 150 உணவுப் பொட்டலங்கள், புதுக்கோட்டை நகரம் சாந்தாரம்மன் திருக்கோயில் மூலம் 150 உணவுப் பொட்டலங்கள் என மொத்தம் 475 உணவுப் பொட்டலங்கள் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் வைக்கப்பட்டன.
கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளோா், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்று குறையும் காலம் வரையிலும் இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...