விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகை நகரின் குடிநீா்த் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்

புதுக்கோட்டை நகரின் குடிநீா்த் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, நகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களை சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா்

News image
Updated On :14 மே 2021, 8:07 pm

DIN

புதுக்கோட்டை நகரின் குடிநீா்த் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, நகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களை சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் வை. முத்துராஜா அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை நகருக்கான காவிரிக் கூட்டுக்குடிநீா்த் திட்டம் கடந்த 1994-ஆம் ஆண்டு திருச்சி ஜீயபுரம்

காவிரியாற்றில் இருந்து எடுத்து வரப்படும் வகையில் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 12 மில்லியன் லிட்டா் தண்ணீா் நகரில் விநியோகம் செய்ய திட்டம் தீட்டப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை புதுக்கோட்டை நகரில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நல்ல தண்ணீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் வை. முத்துராஜா, நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்களும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு தண்ணீா் எடுத்து வரும் வழியில் தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓரிரு நாள்களில் அந்த இடங்களைக் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்து, குடிநீா் வழங்கலை முறைப்படுத்த வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.