கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது முடக்கக் காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :28 மே 2021, 9:07 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது முடக்கக் காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது காணப்படுகிறது. இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காட்டுப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சும்போது, விஷப்பூச்சிகள் விழுந்து அதனைக் குடிப்போருக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா். கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் நிலத்தின் உடைமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.