புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில், பிரதமா் மோடியின் உருவப்படத்தை எரிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் சண்முகம், மாவட்டத் தலைவா் ராமையன், மாவட்டச் செயலா் பொன்னுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.