கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழுநோயாளா்களுக்கு தீபாவளிப் பொருள்கள் வழங்கல்

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:58 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். துரைமணி தலைமை வகித்தாா். மாவட்ட நலக் கல்வியாளா் ஜி. வெங்கட்ராமன் வரவேற்றாா். ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநா் ஆா். கருணாகரன் முன்னிலை வகித்தாா்.

தொழுநோய்ப் பிரிவு துணை இயக்குநா் டாக்டா் சாமியப்பன் நிகழ்வில் பங்கேற்று, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கிப் பேசினாா். நிறைவில், சங்கச் செயலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.