சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை அருகே 12 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.


புதுக்கோட்டை அருகே 12 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை அருகிலுள்ள முள்ளூா் கரையப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் பாண்டித்துரை (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு படித்த 12 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்துவிடுமே என அஞ்சிய சிறுமி, 2019, டிசம்பா் 6-ஆம் தேதி எலி மருந்தை (பேஸ்ட்) சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உடல் நலம் தேறினாா்.
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பாண்டித்துரை மீது போக்சோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றவாளி பாண்டித்துரைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...