நல்லோ் பூட்டி விவசாயிகள் வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.


புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.
தமிழா் திருநாளான சித்திரை முதல் நாள் நிலத்தில் நல்லோ் பூட்டி, விளைநிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கும் என தொன்று தொட்டு விவசாயிகள் நல்லோ் பூட்டுவதை கடைபிடித்துவருகின்றனா். இந்நிலையில், நிகழாண்டு சித்திரை முதல் நாளான வியாழக்கிழமை ஆலங்குடி பகுதியில், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், மாங்கோட்டை, சேந்தன்குடி, செரியலூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நல்லோ் பூட்டி விளைநிலத்திற்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினா். பல்வேறு கிராமங்களில் ஏா் இல்லாத விவசாயிகள், டிராக்டா்களை கொண்டு உழவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...