விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தி.மு.க.சார்பில் முதன் முறையாக குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 குதிரை வண்டிகளும், 8 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.

இதில் மாட்டு வண்டியில் முதல் பரிசான ரூபாய் 40 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை கிளியூர் ஆரிய நாராயணசாமி மாடுகள் தட்டிச் சென்றது.

காலையில் 8 மணிக்கு தொடங்கிய பந்தயத்தை மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாட்டு வண்டிக்கு 8 கிலோமீட்டர், குதிரை வண்டிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டி பிரிவில் 18 ஜோடி குதிரை வண்டிகளும் பங்கேற்றன. இதில் குதிரை வண்டி பந்தயம் சுற்றுக்கு 9 வண்டிகள் என பிரிக்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை அன்னூர் மூர்த்தி குதிரைக்கும், அணைக்காடு செப்ரி குதிரைக்கும் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த மாடுகள், சிறந்த குதிரை மற்றும் வண்டிகளை லாவகமாக ஓட்டி பார்வையாளர்களை கவர்ந்தவர்களுக்கும் சிறப்பு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

கீரனூர்-குண்ணாண்டார் கோயில் சாலையில் நடத்தப்பட்ட இப்பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆராவாரத்துடன் ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!







