தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடுமியான்மலை கோயில் பங்குனித் தேரோட்டம்

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சிகாநாதசுவாமி திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:59 pm

DIN

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சிகாநாதசுவாமி திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத சிகாநாதா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி

புதிய தோ் செய்யப்பட்டு கடந்த ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நிகழாண்டின் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. சுமாா் 9 மணிக்கு தொடங்கி தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 12.35 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. விழாவில், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். மேலும், ஆயிரக்கணக்கானோா் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.