ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவப்பூர் முத்துமாரியம்மன் மாசிப்பெருந் திருவிழாவின் தொடக்கமாக ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 6:41 am

DIN

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 

விழாவின் தொடக்கமாக கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே. மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Story image

சுமார் 900 காளைகள் வரை பங்கேற்க உள்ள இந்த ஜல்லிக்கட்டில், 250 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.

Story image

காளைகள் விறுவிறுப்பாக சீறிப்பாய்ந்து வருகின்றன. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாடுகளைத் தழுவி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று இரவு பூச்சொரிதல் விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.