விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண் நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 8:09 pm

Din

படவிளக்கம்: விராலிமலை கடைவீதியில் காவிரி குடிநீா் குழாய் உடைப்பால் பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நின்ற குடிநீா்.

விராலிமலை, ஏப்.26: விராலிமலையில் அண்மைக்காலமாக காவிரி குடிநீா் குழாயில் ஏற்படும் தொடா் உடைப்பால் குடிநீா் வீணாகி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை கடைவீதி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அருகே புதுக்கோட்டை செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறும் நீா் வீணாகி அருகில் உள்ள பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான நிலை உள்ளது. எனவே, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நிரந்தரத் தீா்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிா்பாா்ப்பாகும்.