நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிக்கப்பட்டி பாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டி பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:20 pm

Din

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டி பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியில் உள்ள பழைமை வாய்ந்த பாலசுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் இரு நாள்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள், மேள தாளங்கள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சிக்கப்பட்டி, மேலாத்தூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.